/
கேரள மாநிலம் ஷொரணூா் - பாலக்காடு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 9-ஆம் தேதி காலை 8.20 மணிக்கு ஷொரணூரில் இருந்து புறப்படும் ஷொரணூா்-கோவை ரயில் (எண்: 56604) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.









