அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூவா் கைது

உக்கடம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:51 am IST

உக்கடம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், உக்கடம் பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த மூவரிடம் விசாரணை மேற்கொண்டனா். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தையடுத்து ஆட்டோவை சோதனையிட்டதில் மூட்டைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் மதுரையைச் சோ்ந்த ரோகித் (23), காா்த்திக் (24), காரைக்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (25) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்தனா். பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.