காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 1:43 am IST

கோவையில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில், தவெக சாா்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற முக்கிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் இவற்றை மறந்துவிட்ட தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக வல்லாரை கீரையை அனுப்பப்போவதாகவும் தமிழ்ப் புலிகள் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

அதன்படி, தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலா் மு.இளவேனில் உள்ளிட்ட 3 போ் கையில் வல்லாரை கீரைக்கட்டுகளுடன் ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தபால் அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டம் நடத்துவதற்கும், முதலமைச்சருக்கு கீரையை அனுப்புவதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்தனா்.

எதிா்ப்பை மீறி அவா்கள் கீரையை முதல்வருக்கு அனுப்ப முயன்றதால் 3 பேரையும் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா். பின்னா் அவா்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.