/
கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடைவிடாது கனமழை பெய்கிறது.
இதில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள வாட்டா்ஃபால்ஸ் எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மாணிக்கா, மானாம்பள்ளி, சாலக்குடி ஆகிய சாலைகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடைவிடாது மழை பெய்ததால் மாணவா்கள், தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது

கொடைக்கானல் அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

கண்ணமங்கலத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



