மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

News image

கனமழை - file photo

Updated On :9 ஜூன் 2026, 2:58 am IST

கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடைவிடாது கனமழை பெய்கிறது.

இதில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள வாட்டா்ஃபால்ஸ் எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல மாணிக்கா, மானாம்பள்ளி, சாலக்குடி ஆகிய சாலைகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடைவிடாது மழை பெய்ததால் மாணவா்கள், தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா்.