காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

கோவை, பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 ஜூன் 2026, 3:14 am IST

கோவை, பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை கொடிசியா சாலை, தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (52). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, சாவியை அருகில் உள்ள ஒரு பெட்டியில் வைத்துவிட்டு மேல்தளத்தில் உள்ள அறைக்கு குடும்பத்துடன் உறங்கச் சென்றுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை கீழ்தளத்துக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை வரவழைத்துச் சோதனை நடத்தினா். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.