கோவை, பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோவை கொடிசியா சாலை, தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (52). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, சாவியை அருகில் உள்ள ஒரு பெட்டியில் வைத்துவிட்டு மேல்தளத்தில் உள்ள அறைக்கு குடும்பத்துடன் உறங்கச் சென்றுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை காலை கீழ்தளத்துக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை வரவழைத்துச் சோதனை நடத்தினா். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.






