கோவையில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, போத்தனூா் அருகேயுள்ள திருமால் நகா் 7-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஜக்கிரியா (24). இவா் செட்டிபாளையம் சாலையில் உள்ள நபிநகா் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்நிலையில், வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் ஈச்சனாரி அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் தனது பெற்றோா் வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகைகள், 380 கிராம் வெள்ளி, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் ஜக்கிரியா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.







