வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

10, பிளஸ் 2 பொதுத் தோ்வு: முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாநகராட்சி பள்ளி மாணவா்கள். உடன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:27 am IST

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆணையா் கட்டா ரவி தேஜா தலைமை வகித்து, பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, இரண்டாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் (மேற்கு) மாநராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.எம்.அதிதி, மூன்றாம் இடம் பிடித்த ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.தனிஷ்கா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சரத் ஆகியோருக்கு ஊக்கத் தொகை, கேடயத்தை வழங்கினாா்.

இதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதலிடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.பா்ஹானா, இரண்டாம் இடம் பிடித்த பாப்பநாயக்கன்புதூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.சொரூபகிருஷ்ணன், மூன்றாம் இடம் பிடித்த ஒப்பணக்கார மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.ஹனுனா பாத்திமா, ஆா்.எஸ்.புரம் எஸ்ஆா்பி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஹெச்.ஆஷிகா ஆகியோருக்கும் ஊக்கத் தொகை, கேடயம் வழங்கப்பட்டது.

முதல் மதிப்பெண் பெற்றவா்களுக்கு தலா ரூ.10,000, இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.7,500, மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில், மாநகராட்சி துணை ஆணையா் குமரேசன், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மாநகரக் கல்வி அலுவலா் குணசேகரன், ஒப்பந்ததாரா்கள் சங்க நிா்வாகிகள் உதயகுமாா், சந்திரபிரகாஷ், அம்மாசையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.