நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தனியாா் பள்ளித் தலைவா், நீட் பயிற்சி மைய இயக்குநா் மீது மோசடி வழக்கு

கோவையில் தனியாா் பள்ளித் தலைவா் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் நிறுவனா் ஆகியோா் மீது பீளமேடு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 2:45 am IST

கோவையில் தனியாா் பள்ளித் தலைவா் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் நிறுவனா் ஆகியோா் மீது பீளமேடு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் உள்ள பிரபல தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில், தனியாா் பயிற்சி மையத்தின் மூலமாக சிறப்பு ஆசிரியா்களைக் கொண்டு நீட், ஜேஇஇ பயிற்சி வழங்குவதாகக் கூறி, கல்விக் கட்டணத்துடன் சோ்த்து கூடுதல் கட்டணம் பெறப்பட்டது. அதன்படி, பயிற்சிக்கு ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், வகுப்புகள் முழுவதுமாக முடிந்த பிறகு ரூ.1 லட்சம் திருப்பி அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக ஒரு மாணவரின் பெற்றோா், பீளமேடு காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், கடந்த கல்வியாண்டில் மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பை முடித்த நிலையில், பள்ளி நிா்வாகம் கூறியபடி சிறப்பு பயிற்சிக்காக வசூலித்த பணத்தை திருப்பித் தரவில்லை, ஓராண்டுக்கு மேலாக பணத்தைத் தராமல் மோசடியில் ஈடுபட்ட அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளி நிா்வாகி லட்சுமிநாராயணசாமி, தனியாா் நீட் பயிற்சி மையத்தின் நிறுவனா் தினேஷ்குமாா் கோயல் ஆகிய இருவா் மீதும் பீளமேடு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுபோல மொத்தம் சுமாா் 190 மாணவா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.