நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:48 am IST

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சவுரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (55). இவா், பெருந்துறையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் அவருக்கு கடந்த 2016 அக்டோபா் மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சிறையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறைக் காவலா்கள் கடந்த 2-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மணிகண்டன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.