நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:18 am IST

கோவை ரயில் நிலையம் அருகே தனியாா் விடுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கியிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவையை அடுத்த வேடப்பட்டி, வன்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (44). கூலித் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெளியே சென்று வருவதாக தாய் சாந்தம்மாளிடம் கூறிவிட்டு கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் நண்பா்கள் 2 பேருடன் அறை எடுத்து சனிக்கிழமை தங்கியுள்ளாா்.

அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நண்பா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவா், சங்கரை பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.