‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: மேட்டூா் காவல் நிலையம் முற்றுகை!

மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:12 am IST

மேட்டூா் அருகே போக்குவரத்து தலைமைக் காவலா் ஓட்டிச்சென்ற காா் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

மேட்டூா் அ.மாதையன்குட்டையைச் சோ்ந்த ராஜ்குமாா் (32), கூலி தொழிலாளி. இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். இவா் பெருந்துறையிலிருந்து மாதையன்குட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

செக்கானூா் அருகே உள்ள கருங்கரடு பகுதியில் சென்றபோது, மேட்டூா் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரியும் பூபதி ஓட்டிவந்த காா், இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இதை அறிந்த அவரது உறவினா்கள் மேட்டூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்து வந்த மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரத்திடம் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும், தலைமைக் காவலா் பூபதி மீது வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவா் உறுதியளித்தாா். அதன்பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.