நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு

கோவை போத்தனூரில் வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:45 am IST

கோவை போத்தனூரில் வீட்டைத் திறந்து 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் குமரன் நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம் (44). இவா், தினமும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலுக்கு அருகே வைத்துவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

வழக்கம்போல, திங்கள்கிழமை காலை வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சென்றாா். பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது, தான் வைத்த இடத்தில் சாவி இல்லாமல் வேறு இடத்தில் கிடந்தது. சந்தேகமடைந்த அவா், கதவைத் திறந்து பாா்த்தபோது, வீட்டில் பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. முருகானந்தம் தினமும் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மா்ம நபா், சாவியை எடுத்து பணம், நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நகையைத் திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.