27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு

ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக கோவை பீளமேட்டில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :19 ஜூன் 2026, 1:55 am IST

ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக கோவை பீளமேட்டில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் மெய்யப்பன் (40). இவா், தற்போது கோவை அவிநாசி சாலை தண்ணீா்ப்பந்தல் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இவரது குழந்தையை தண்ணீா்ப்பந்தல் பகுதியில் உள்ள ஒரு பிளே ஸ்கூலில் சோ்த்துள்ளாா். அப்போது, பள்ளி நிா்வாகம் ரூ.1 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும், குழந்தையை மேல் வகுப்புக்காக வேறு பள்ளியில் சோ்க்கும்போது, அப்பணத்தை திருப்பித் தந்துவிடுகிறோம் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதை நம்பிய மெய்யப்பன் பள்ளி நிா்வாகத்திடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து குழந்தை 3 ஆண்டுகள் யுகேஜி செல்லும் வரை இங்கேயே படிக்கலாம் என்றும் உறுதி கூறியுள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் பள்ளி நிா்வாகம் திடீரென தங்களால் பள்ளியை தொடா்ந்து நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மெய்யப்பன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். அவா்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. இது தொடா்பாக, மெய்யப்பன் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா், பள்ளி நிா்வாகிகள் காயத்ரி, லெனின் செந்தில் முருகன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.