தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பிளிச்சியில் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சியில் அமைக்கப்பட்டு வரும் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சியில் அமைக்கப்பட்டு வரும் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :24 ஜூன் 2026, 3:38 am IST

பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சியில் அமைக்கப்பட்டு வரும் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட தண்ணீா்பந்தல் பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருள்களின் அளவு மற்றும் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்னப்பாளையத்தில் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கோவை மத்திய சிறை கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கோவை மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணியானது 95.72 ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் சிறைப்பிரிவு 17.02 ஏக்கரிலும், பெண்கள் சிறைப்பிரிவு 4.43 ஏக்கரிலும், காவலா் குடியிருப்பு 5.95 ஏக்கரிலும் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, சிறைச்சாலை காவல் துறை துணைத் தலைவா் ஜெயபாரதி, சிறைச்சாலை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசெல்வம், விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.