இந்த நிகழ்வில், ரயில் பயணா்கள் சங்கம் சாா்பில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘மங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில், பெங்களூரு - எா்ணாகுளம் இன்டா்சிட்டி விரைவு ரயில், எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் ஆகியவை போத்தனூரில் நின்று செல்ல வேண்டும். கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக திருநள்ளாறுக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.