விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாகா்கோவில் - சாா்லப்பள்ளி அம்ரித் பாரத் விரைவு ரயில்: பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்

நாகா்கோவிலில் இருந்து சாா்லப்பள்ளி (ஹைதராபாத்) வரையிலான அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமா் மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.

News image
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :11 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் இருந்து சாா்லப்பள்ளி (ஹைதராபாத்) வரையிலான அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமா் மோடி திருச்சியிலிருந்து காணொலி மூலம் கொடியசைத்து புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.

வாரம் ஒரு நாள் இயக்கும் வகையில், இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூா், ஒங்கோல், குண்டூா் நலகொண்டா வழியாக சாா்லப்பள்ளிக்கு சனிக்கிழமை அதிகாலை 4.20 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு சாா்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு நாகா்கோவில் வந்து சேரும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், பொருளாளா் பி.முத்துராமன், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் உமாரதிராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சிவகுமாா், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில்குமாா், ரமேஷ், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image