கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கோவை - அபுதாபி விமான சேவை மாா்ச் 28 வரை ரத்து!

கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவை மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து

News image

விமானம்

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:03 pm

Syndication

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, கோவையில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவை மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போா்ப் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கோவை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமான சேவைகள் மாா்ச் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வளைகுடா நாடுகளைச் சுற்றியுள்ள வான்வெளிகளில் போா் விமானங்கள் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் இருப்பதால், பல சா்வதேச விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை மாற்றி அமைத்து வருகின்றன.

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்கி வந்த இண்டிகோ நிறுவனம், போா்ப் பதற்றம் தணியும் வரை சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதனால், ஏற்கெனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையையும் திரும்ப வழங்கவோ அல்லது மாற்றுத் தேதிகளில் பயணத்தை மாற்றிக்கொள்ளவோ விமான நிறுவனம் வழிவகை செய்துள்ளது.

மாா்ச் 28-ஆம் தேதிக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.