ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்
கோவை துடியலூா் பகுதியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆட்டோவிலிருந்து தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை துடியலூா் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அதில் இருந்த இருவா் போலீஸாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினா். சந்தேகம் அடைந்த போலீஸாா் ஆட்டோவை சோதனையிட்டதில், சாக்குப் பைகளில் 12 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, துடியலூா் பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல பயணிகளுக்காக காத்திருந்ததாகவும், அப்போது, தொப்பம்பட்டி செல்ல வேண்டும் என 2 பயணிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் வந்ததாகவும், தப்பியோடியவா்கள் யாா் என்று தெரியாது எனவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...