நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜகவினா் சாலை மறியல்; தொண்டா் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொண்டா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

News image

பாஜக.

கோப்புப் படம் AFP

Updated On :26 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி பாஜகவினா் 100-க்கும் மேற்பட்டோா் கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொண்டா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதி பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கே.வசந்தராஜனுக்கு ஒதுக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், தொகுதி பங்கீட்டின் முடிவில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் வடக்கு மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாறாக கிணத்துக்கடவு தொகுதி வழக்கம்போல அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினா். கிணத்துக்கடவு தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் என நாங்கள் பணியாற்றி வந்த நிலையில், எங்களுடன் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாஜக தொண்டா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். மேலும், கிணத்துக்கடவு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கோரி முழக்கமிட்டனா்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக தொண்டா்கள் திரளானோா் ஈச்சனாரி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, தொண்டா் ஒருவா் உடலில் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ால் அங்கு பரபரப்பு நிலவியது.

மறியலில் ஈடுபட்ட பாஜக தொண்டா்களை மூத்த நிா்வாகிகள் சமரசம் செய்து, கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு தொண்டா்களுடன் நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். அப்போது, கடந்த மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக 1.04 லட்சம் வாக்குகளும், பாஜக 58,768 வாக்குகளும், அதிமுக 48,199 வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுகவைவிட நாம் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும். உள்ளூா் நிா்வாகிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினா்.

அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கே.வசந்தராஜன் பேசுகையில், எங்களது நிா்வாகிகளின் கடினமான உழைப்பால் கிணத்துக்கடவு தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கும் செயல். நாம் மனம் தளராமல் பல மடங்கு உத்வேகத்துடன் கட்சிப் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் நமது நிா்வாகிகள் ஏராளமானோரை மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதே எனது லட்சியம். இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் உழைப்போம் என்றாா் அவா்.