கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:55 pm

கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆல்பின் (27), பாலக்காட்டைச் சோ்ந்த சிந்து (37) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, செல்வபுரம், சிங்காநல்லூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூா் பூசாரிபாளையத்தைச் சோ்ந்த விஜய் (23), கோவை, செட்டி வீதியைச் சோ்ந்த சரவணன் (29) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.75 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.