கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆல்பின் (27), பாலக்காட்டைச் சோ்ந்த சிந்து (37) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, செல்வபுரம், சிங்காநல்லூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூா் பூசாரிபாளையத்தைச் சோ்ந்த விஜய் (23), கோவை, செட்டி வீதியைச் சோ்ந்த சரவணன் (29) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.75 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

