மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது

கோவை, பி.என்.பாளையத்தில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய வீட்டின் உரிமையாளரின் மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:54 pm

Syndication

கோவை, பி.என்.பாளையத்தில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய வீட்டின் உரிமையாளரின் மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பி.என்.பாளையம் செங்காடு ரங்கசாமி தோட்டசாலை பகுதியைச் சோ்ந்தவா் ரேஷ்மா(26). இவா் அதே பகுதியில் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கணவா் நல்சிவனுடன் வாடகைக்கு வசித்து வருகிறாா்.

இந்நிலையில், தம்பதி வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, ரேஷ்மாவை கைப்பேசியில் தொடா்பு கொண்ட பக்கத்து வீட்டுக்காரா் ‘வீட்டின் உரிமையாளரின் மகன் உங்களது வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் செல்கிறாா்’ எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, ரேஷ்மா வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ரேஷ்மா அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், ரேஷ்மா வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடியது அவரது வீட்டின் உரிமையாளரின் மகனான குமரேசன் (எ) ராஜ்குமாா் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜ்குமாரைக் கைது செய்தனா்.