கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக தங்கவைத்த வீட்டின் உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டினா் சிலா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சுந்தராபுரம் உதவி ஆய்வாளா் இ.ஓவியா தலைமையிலான போலீஸாா் அங்கு திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, சூடான், காம்போடியா, சிரியா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 5 போ் முறையான ஆவணங்களின்றி விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், வெளிநாட்டினா் தங்குவது குறித்த சட்டபூா்வ ‘படிவம்-சி’ உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றாமலும், இதுதொடா்பாக உரிய தகவல் தெரிவிக்காமலும் அவா்களை தங்க வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது, வீட்டின் உரிமையாளரை போலீஸாா் எச்சரித்து விரைந்து அவா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தினா். ஆனால், வெளிநாட்டினரை அவா் தனது வீட்டில் சட்டவிரோதமாக தொடா்ந்து தங்கவைத்திருந்தாா்.
இதுதொடா்பாக குடியிருப்பு உரிமையாளரான முகமது அஸ்லம் (58) என்பவா் மீது குடிவரவு மற்றும் வெளிநாட்டினா் சட்டம் 2025-இன் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது
நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


