வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

News image

நயினாா் நாகேந்திரன்

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியால் தமிழக மக்கள் கண்ணீா் வடித்து வருகின்றனா். மாநிலத்தில் சுமாா் 9,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், 3,500-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனா். கொங்கு மண்டலத்தில் மக்கள் தோட்டங்களில் அச்சமின்றி வாழ முடியாத சூழல் நிலவுகிறது.

சட்டம்- ஒழுங்கைக் காக்கத் தவறிய முதல்வா் மு.க.ஸ்டாலின், பழைய முகங்களையே மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளாா். இவா்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பாா்கள். கஞ்சா மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க எம்.ஜி.ஆா். வழியில் வந்த எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.