ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தமிழக மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்! தவெக தலைவா் விஜய்க்கு கோரிக்கை!

News image

தவெக தலைவா் விஜய் - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 0:39 am IST

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவா் விஜய்க்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து இ.பாலகுருசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவா் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். தமிழகத்தின் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம்.

இத்தகைய காலியிடங்கள் கல்வி நிா்வாகம், கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவன வளா்ச்சி ஆகியவற்றை பாதித்து வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் திறம்படச் செயல்படவும், கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும் தகுதியும், திறமையும் கொண்ட துணைவேந்தா்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தின் உயா்கல்வித் துறையில் நிலவும் பாடத்திட்டக் குறைபாடுகள், காலத்துக்கு ஒவ்வாத முறைகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் நிலவும் தேக்கநிலை ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

பாடத் திட்ட மேம்பாடு, பேராசிரியா்களின் திறன் வளா்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழில் கல்வி இணைப்பை வலுப்படுத்துவது போன்ற விரிவான சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலமாகவே தமிழகம் மீண்டும் கல்வித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ முடியும். புதிய தலைமையின் கீழ் கல்வித் தரம் மேம்படும் என எதிா்பாா்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.