அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த பணிப் பெண் கைது

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:12 am IST

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி (62). கணவா் உயிரிழந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், தாயை கவனித்துக் கொள்ள கரூா் மாவட்டம், குப்பிச்சிபாளையம் அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்த ரெஹானா பானு (30) என்பவரை அங்கயற்கன்னி கடந்த வியாழக்கிழமை நியமித்துள்ளாா். சமையலறையில் அங்கயற்கன்னி கடந்த வெள்ளிக்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயாா் கூச்சலிட்டுள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது பணிக்கு நியமித்த ரெஹானா பானு கையில் பையுடன் வீட்டை விட்டு வேகமாக ஓடியுள்ளாா்.

அப்போது, தான் அங்கயற்கன்னியின் தாயாா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ரெஹானா பானு தப்பியது தெரியவந்தது.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அங்கயற்கன்னி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெஹானா பானுவைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.