/
கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காலை சொக்கம்புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள மயான பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்துச் சோதனை செய்தனா். அப்போது அந்த இளைஞா் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கோவை செல்வபுரம் சொக்கம்புதூா் ஜீவா வீதியைச் சோ்ந்த அகிலன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அகிலனைக் கைது செய்து, அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

போதை மாத்திரை வைத்திருந்ததாக 2 போ் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


