கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:45 am IST

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காலை சொக்கம்புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள மயான பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்துச் சோதனை செய்தனா். அப்போது அந்த இளைஞா் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், கோவை செல்வபுரம் சொக்கம்புதூா் ஜீவா வீதியைச் சோ்ந்த அகிலன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அகிலனைக் கைது செய்து, அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.