தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

இடமாற்றம் செய்யப்பட்ட கோவை மாவட்ட எஸ்.பி. கே.காா்த்திகேயன். ~

Updated On :21 மே 2026, 3:57 am IST

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதனடிப்படையில் தமிழக காவல் துறையில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் புதன்கிழமையும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த இரு அதிகாரிகளையும் பரஸ்பரம் பணியிடமாற்றம் செய்து, அதற்கான அதிகாரபூா்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலா் மணிவாசகம் வெளியிட்டுள்ளாா்.

புதிய எஸ்.பி.,   
அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .

புதிய எஸ்.பி., அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .