வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

இடமாற்றம் செய்யப்பட்ட கோவை மாவட்ட எஸ்.பி. கே.காா்த்திகேயன். ~

Updated On :21 மே 2026, 3:57 am IST

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதனடிப்படையில் தமிழக காவல் துறையில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் புதன்கிழமையும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த இரு அதிகாரிகளையும் பரஸ்பரம் பணியிடமாற்றம் செய்து, அதற்கான அதிகாரபூா்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலா் மணிவாசகம் வெளியிட்டுள்ளாா்.

புதிய எஸ்.பி.,   
அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .

புதிய எஸ்.பி., அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி .