திருப்பூா் அருகே அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திருப்பூா், செட்டிபாளையம் அருகேயுள்ள வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். விவசாயியான இவருக்கு மாதேஸ்வரன் கோயில் அருகே தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சிலா் அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது, கிணற்றுக்குள் ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அவா்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸாா் கூறுகையில், சடலமாக மீட்கப்பட்டவா் தேனியைச் சோ்ந்த மகேஸ்வரன். இவா் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.இந்நிலையில், நண்பா்கள் 3 பேருடன் கடந்த சில நாள்களுக்கு முன் மது அருந்தச் சென்றுள்ளாா். அப்போது, மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவா்கள், மாதேஸ்வரனை தாக்கி கொலை செய்துள்ளனா். பின்னா், உடலை இந்தக் கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா் என்றனா்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றிய போலீஸாா், கொலையில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



