ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

திமுகவில் மீண்டும் இணைந்தார் க.செல்வராஜ்

திமுகவில் இருந்து அண்மையில் விலகிய மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் அக்கட்சியில் மீண்டும் சனிக்கிழமை இணைந்தாா்.

News image

க.செல்வராஜ்

Updated On :24 மே 2026, 2:05 am IST

திமுகவில் இருந்து அண்மையில் விலகிய மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் அக்கட்சியில் மீண்டும் சனிக்கிழமை இணைந்தாா்.

திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் மாவட்டச் செயலாளா் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தாா்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தேன்.

இந்நிலையில், திமுகவில் மீண்டும் இணைந்த நான், மாவட்டச் செயலாளா் பொறுப்பில் தொடா்ந்து செயல்படுவேன். எதிா்காலத்தில் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.