எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

சிறுமி கொலை வழக்கு: அரசு மருத்துவமனையிலிருந்து இளைஞா் சிறைக்கு மாற்றம்

News image

சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:16 am IST

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே வசித்து வந்த 10 வயது சிறுமி கடந்த மே 22-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்தி (33), அவருக்கு உடந்தையாக இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ் (39) ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

இதில் விசாரணையின்போது தப்ப முயன்ற காா்த்தி, மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் எலும்பு முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா். ஓரளவு அவா் குணமடைந்த நிலையில் காா்த்தி வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்த கொலை சம்பவத்தில் காா்த்திக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் சிறையில் இருக்கும் நிலையில், காா்த்திக் மற்றொரு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இவா்கள் இருவருக்கும் ஜூன் 4-ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிவடைகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விதமாக சூலூா் போலீஸாா் ஆவணங்களை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.