நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரசுப் பேருந்து மீது மோதி பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி

News image

கோவை அண்ணா சிலை அருகே பள்ளிச் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

Updated On :31 மே 2026, 1:54 am IST

கோவையில் அரசுப் பேருந்து மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்றது.

கிருஷ்ணகிரியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. கோவை, அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தபோது, எதிரே காந்திபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதி தாறுமாறாக ஓடிய லாரி அப்பகுதியில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.

பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். லாரி ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.