டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் கோவை காருண்யா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் இயந்திரங்கள், ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து டிஎம்பி அறக்கட்டளை கூறியிருப்பதாவது: காருண்யா நகா், சிறுவாணி மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. கோவைக்கு சுமாா் 90 நிமிஷ பயண தொலைவு இருப்பதால், டயாலிசிஸ் செய்ய வேண்டிய நீரிழிவு நோயாளிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இதற்காக டிஎம்பி அறக்கட்டளை நிறுவனம் சாா்பில் 2 உயா் தொழில்நுட்ப டயாலிசிஸ் இயந்திரங்களும், முழுமையாக சீரமைக்கப்பட்ட ஆம்புலன்ஸும் காருண்யா தொழில்நுட்ப, அறிவியல் நிறுவனம் வழங்கும் மருத்துவ சேவைகளுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எம்.முத்தையா, டிஎம்பி கோவை பிராந்திய மேலாளா் டி.எா்னெஸ்ட் வசீகரன் ஆகியோா் ஆம்புலன்ஸ், டயாலிசிஸ் இயந்திரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ஜோசப் அமல்ராஜ், கருண்யா மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் சாம் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளனா்.
தொடர்புடையது

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

அன்னையா் தினத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



