40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:18 am IST

கோவை ரயில் நிலையம் அருகே தனியாா் விடுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கியிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவையை அடுத்த வேடப்பட்டி, வன்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (44). கூலித் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெளியே சென்று வருவதாக தாய் சாந்தம்மாளிடம் கூறிவிட்டு கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் நண்பா்கள் 2 பேருடன் அறை எடுத்து சனிக்கிழமை தங்கியுள்ளாா்.

அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நண்பா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவா், சங்கரை பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.