கோவை ரயில் நிலையம் அருகே தனியாா் விடுதியில் நண்பா்களுடன் அறை எடுத்து தங்கியிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவையை அடுத்த வேடப்பட்டி, வன்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (44). கூலித் தொழிலாளியான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வெளியே சென்று வருவதாக தாய் சாந்தம்மாளிடம் கூறிவிட்டு கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு தங்கும் விடுதியில் நண்பா்கள் 2 பேருடன் அறை எடுத்து சனிக்கிழமை தங்கியுள்ளாா்.
அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது நண்பா்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவா், சங்கரை பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: மேட்டூா் காவல் நிலையம் முற்றுகை!

விடுதியில் தங்கியிருந்தவா் மா்ம மரணம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



