/
கோவையில் அரசுப் பேருந்து மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து நின்றது.
கிருஷ்ணகிரியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சனிக்கிழமை அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. கோவை, அண்ணா சிலை சிக்னல் அருகே வந்தபோது, எதிரே காந்திபுரத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து மீது மோதி தாறுமாறாக ஓடிய லாரி அப்பகுதியில் இருந்த பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு நின்றது.
பேருந்தில் இருந்த பயணிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். லாரி ஓட்டுநருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, அண்ணா சிலை அருகே பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து நின்ற லாரி.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து- மினி லாரி மோதல்: இருவா் காயம்

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



