நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:18 am IST

கோவையில் 13 வயது சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே நண்பா்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த நபா் சிறுமியின் உடல் தொடா்பாக அநாகரீகமாக பேசியுள்ளாா். இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக கோவை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் கோவை - திருச்சி சாலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜான் பீட்டா் (53) என்பதும், சிறுமியிடம் அநாகரீகமாக பேசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜான் பீட்டரை கைது செய்தனா்.