ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

News image

தனுஷ்.

Updated On :1 ஜூன் 2026, 1:42 am IST

வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். இவரது இல்ல திருமண விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினா்கள் வந்துள்ளனா்.

அதில் ஒருவரான நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (22) என்பவா், உறவினா்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது தனுஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லையாம்.

இதையடுத்து, வால்பாறை தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், தனுஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.