வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஏற்றுமதி நிறுவனத்தில் திருட முயன்ற மூவர் கைது

பெருந்துறை அருகே, ஏற்றுமதி நிறுவனத்தில் திருட முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை பெருந்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:29 am

DIN

பெருந்துறை அருகே, ஏற்றுமதி நிறுவனத்தில் திருட முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை பெருந்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தீபக்குமார் மகாராஜா (25), மனோஜ்குமார் தாஸ் (20), ஜிதேந்திர பாண்டா ( 22). இவர்கள் மூவரும், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையம் பகுதியில் அறை எடுத்துத் தங்கி, அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் காவலர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றபோது, அவர்கள் மூவரும் நிறுவனத்தின் சுற்றுச் சுவருக்கு வெளியே, துணி பண்டல்களை வீசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்.  சந்தேகம் அடைந்து விசாரித்தபோது,  அதை அவர்கள் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது.  இதுகுறித்து, நிறுவனத்தினர் அளித்த புகாரின்பேரில் பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.