பாஜக சார்பில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழன்னை உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஈரோடு ஈஸ்வரன் கோயில் அருகில் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழன்னை உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநில பிரசாரப் பிரிவு பொறுப்பாளர் ஆ.சரவணன், கோட்ட பொறுப்பாளர் வே. வைரவேல் மாவட்ட பொதுச் செயலர்கள் குரு.குணசேகரன், கலைச் செல்வன், மாவட்டச் செயலர்கள் கிருஷ்ணகுமார், சரவணன், மாவட்ட பொருளாளர் விஷ்வபாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி பொன்னுசாமி , மகளிர் அணிச் செயலர் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.