‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து புதன்கிழமை  அதிகரித்ததால் மொடக்குறிச்சி சட்டப் பேரவை  உறுப்பினர் காவிரி ஆற்றை புதன்கிழமை பார்வையிட்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து புதன்கிழமை  அதிகரித்ததால் மொடக்குறிச்சி சட்டப் பேரவை  உறுப்பினர் காவிரி ஆற்றை புதன்கிழமை பார்வையிட்டார்.
கொடுமுடி காவிரி ஆற்றுக்குத் தண்ணீர் வரத்து அதிகமானதால் இரு கரைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம், கொடுமுடி காவிரி ஆற்றை பார்வையிட்டு கரையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
மேலும், கரையோரப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கொடுமுடி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், நில வருவாய் ஆய்வாளர் ராஜீவ் காந்தி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 காவிரி கரையோரப் பகுதிகளில் கொடுமுடி காவல் துறையினர், தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.