பெருந்துறை அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெருந்துறையை அடுத்த சுள்ளிபாளையம், சக்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). பெருந்துறையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல் அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். இவரது மனைவியும் வெளியே சென்றுள்ளார். இருவரும் இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்து 5 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


