கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையிடம் மனு

நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்துக்குத் தொடர்ந்து அனுமதி மறுப்பது தொடர்பாக, ஈரோடு மாவட்ட

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்துக்குத் தொடர்ந்து அனுமதி மறுப்பது தொடர்பாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான சீதாலட்சுமி, கட்சி நிர்வாகிகள் அளித்துள்ள மனு:நாம் தமிழர் கட்சி சார்பில் மக்கள் பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியாக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறோம். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து எவ்விதப் போராட்டத்துக்கும் போலீஸார் அனுமதி அளிக்காமல் மறுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மற்ற அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியின் ஜனநாயக ரீதியான உரிமை பறிக்கப்படுகிறது.    எனவே, இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் நாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.