தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா

கொடுமுடி அருகே தெற்குபுதுப்பாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 5:49 am IST

கொடுமுடி அருகே தெற்குபுதுப்பாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் விழா டிசம்பர் 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடதன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை அம்மனுக்கு முதாலம் கால பூஜை தொடங்கியது. மதியம் பக்தர்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடியும், அக்னிச் சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டும் மேலதாளம் முழங்க கோயிலை வலம் வந்து கோயிலில் வைத்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
திங்கள்கிழமை மாலை பொங்கல் வைக்கும் விழா, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.