லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பருத்தி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி, தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பொருள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், அந்தியூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பருத்தி அறுவடை நடைபெற்று வருவதால் சுமார் 9 ஆயிரம் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பிடி காட்டன் பருத்தி ரகம் அதிக அளவில் வருவதால் திங்கள்கிழமை தொடங்கி இருநாள்கள் வரையில் ஏலம் நடைபெறுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், சேலம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் பருத்தியினைக் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால் லாரிகள் இயங்கவில்லை. இதனால் ஏலம் முடிவடைந்தவுடன் பருத்தியினை லாரிகளில் ஏற்றிச் செல்ல முடியாது.
எனவே, வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காததால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறவில்லை. லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவடைந்த பின்னர் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 55 வரையில் பருத்தி ஏலம் போன நிலையில், தற்போது சுமார் 10 ஆயிரம் பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ: கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி

வழிப்பறி வழக்கில் கைதான மூன்று பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.5 ஆயிரம் அபராதம்






