கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

சென்னிமலை முருகன் கோயிலில்  பாலாபிஷேக விழா

சென்னிமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 7:46 am IST

சென்னிமலை முருகன் கோயிலில் பாலாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
சென்னிமலை, முருகன் கோயிலில், ஆண்டுதோறும்  சென்னிமலை கைத்தறி மற்றும் சாயத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாலாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் 51ஆவது ஆண்டு பாலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 அதைத் தொடர்ந்து, கைலாசநாதர் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர். மேள, தாளங்கள் முழங்க, 4 ராஜ வீதிகளில் வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு, இடும்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன. 
பின்னர், மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் சென்றனர். அங்கு, முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகளின் பிரகார உலா காட்சியும் நடைபெற்றது. 
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகக் கமிட்டி தலைவர் எஸ்.முத்துசாமி, துணைத் தலைவர் பி.ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் வி.ராமலிங்கன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.