இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

110 அடியைத் தாண்டியது பவானிசாகர் நீர்மட்டம்: ஆடு வெட்டி விவசாயிகள் விருந்து

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 7:47 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. 2006 க்குப் பின்னர் அணையின் நீர்மட்டம் தற்போது 110 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் ஆடு வெட்டி, விருந்து படைத்தனர்.
ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், கொள்ளளவு 32.80 டிஎம்சி. இதில், 15 அடி உயரம் சேறும் சகதியும் போக மீதியுள்ள 110 அடி அணையின் நீர்மட்டம் உயரமாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அணைக்கு நீர்வரத்து 
சராசரியாக விநாடிக்கு 6,556 கன அடியாக உள்ளது. அதாவது நீர் இருப்பு 24.90  டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 900 கனஅடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும், குடிநீருக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் 1,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை நீர்மட்டம் 110 அடியை எட்டிய நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி, விருந்து படைத்தனர். 
அணை நிரம்புவதற்கு 10 அடி இருந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலுக்குத்  தண்ணீர் திறந்துவிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால், தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.  
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தாமல் உடனடியாகத் திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் மூலமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு தினந்தோறும் விநாடிக்கு 1,450 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.