காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஈரோடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :29 ஜூன் 2018, 12:50 am IST

ஈரோடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி  சார்பில் ஆலோசனைக்கூட்டம் அதன் தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில்யில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  
ஈரோடு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசருக்கு  சிறப்பாக வரவேற்பு அளிப்பது,  பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது,  ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே நடைபெறும்  மேம்பாலப் பணி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.  பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்புக் கம்பி புதன்கிழமை இரவில் கீழே விழுந்தபோது அப்பகுதியில் சென்ற 2 பேர்  காயம் அடைந்தனர். அடிக்கடி விபத்துகள் நடைபெறும் நிலையில்,  தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பாலப் பணிகளை துரிதமாக  முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. 
இதில் முன்னாள் சட்டப் பேரவை  ஆர். எம் .பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 
வட்டார தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட  கட்சியின் வட்டாரத் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.