புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 429 பேருக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மனிதவள

Updated On :29 மார்ச் 2018, 3:08 am

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் இலவசத் தொழில்பயிற்சியை நிறைவு செய்த 429 பேருக்குச் சான்றிதழ் மற்றும் 10 பேருக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளரும், கட்டடவியல் துறைப் பேராசிரியருமான பி.ஆர்.நாகராஜன் வரவேற்றார். ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எல்.பூபதி, சாய்ராம் அறக்கட்டளை நிறுவனர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பயிற்சி பெற்ற  பயனாளிகளுக்கு ஈரோடு தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் கே.கே.பாலுசாமி தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், இலவசத் தொழிற்பயிற்சி பெற்ற ஆப்பக்கூடல், அத்தாணி, கோபி, பவானி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளைச் 429 பேருக்குச சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
இதில், பேராசிரியர்கள் ஆர்.பார்த்திபன், பி.கே.சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.