சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, யாக சாலை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, உற்சவமூர்த்திகளுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்பட பல்வேறு வகையான திரவியங்களுடன் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவையொட்டி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து, பகல் 12.30 மணியளவில் கோயிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் "அரோகரா' கோஷத்துடன் சேவல் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பங்குனி உத்திர தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தவுள்ளனர். மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

