திம்பம் மலைப் பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப் பாதையான திம்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் அபிமன்யு ஓட்டி வந்தார். 13-ஆவது வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.
விபத்து காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநில வாகனங்களும் திம்பம், ஆசனூர், பண்ணாரியில் வரிசையாக அணிவகுத்து நின்றன. அங்கு வந்த மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க நினைக்கிறாா்கள்: சீமான் குற்றச்சாட்டு

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

