மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சர்வதேச சதுரங்க வீரருக்கு  "ஒளிரும் ஈரோடு'  நிதியுதவி

சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரர் இனியனுக்கு "ஒளிரும் ஈரோடு' அமைப்பு சார்பில் ரூ. 1.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:19 am

சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரர் இனியனுக்கு "ஒளிரும் ஈரோடு' அமைப்பு சார்பில் ரூ. 1.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 2 விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு "ஒளிரும் ஈரோடு'  ஃபவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. 
அதன்படி சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த வீரர் இனியன் என்ற மாணவரின் திறமையைக் கண்டறிந்து அவரைத் தேர்வு செய்து கடந்த  3 ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக  ரூ. 25 லட்சம் வரை "ஒளிரும் ஈரோடு'  ஃபவுண்டேஷன் நிதியுதவி அளித்து ஊக்குவித்து வருகிறது.
ஈரோடு வீரர் இனியன் சென்ற  25.6.2018 முதல் 1.8.2018 வரை நடைபெற்ற 5 சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் அபுதாபியில் நடைபெற்ற அபுதாபி மாஸ்டர்ஸ் போட்டி 2018யில் 2,840 புள்ளிகளுடன் நான்காவது கிராண்ட் மாஸ்டர் தகுதியைப்  பெற்றுள்ளார். இவர் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கு இன்னும் 20 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. தொடர்ந்து 3 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார். 
இம்மாதம், 1.9.2018 முதல் 8.9.2018 வரை இத்தாலியின் 
திரிஸ்டியில் நடைபெறும் 20ஆவது  சர்வதேச செஸ் போட்டியிலும்,    9.9.2018 முதல் 16.9.2018 வரை இத்தாலியின் அமன்டியாவில் நடைபெறும் 16 ஆம் சர்வதேச செஸ் போட்டியிலும்,  20.9.2018 முதல் 23.9.2018 வரை ஸ்லோவேனியா நாட்டின் முர்ஸ்கா சோபோடாவில் நடைபெறும்  சர்வதேச செஸ் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.  இலவற்றில் பங்கேற்பதற்காக ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலையை "ஒளிரும் ஈரோடு' ஃபவுண்டேஷன் அமைப்பின் செயலாளர் ந.கணேசன், இனியனின் தந்தை பன்னீர்செல்வத்திடம் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.